Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமேதி, ரேபேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. ராகுல் காந்தி போட்டியா?

Siva
வெள்ளி, 3 மே 2024 (08:34 IST)
அமேதி மற்றும் ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அதில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில் தற்போது ரேபேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கிஷோர் லால் சர்மா போட்டியிடுவதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அமேதி தொகுதியில் பாஜக சார்பில் அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் சார்பாக  கிஷோர் லால் சர்மா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அமேதி,  ரேபேலி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்ற நிலையில் கடைசி நாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் ஆச்சரியமாக அமைதி தொகுதிக்கு பதிலாக ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments