Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதன்முறையாக அம்பானி, அதானி பெயரை உச்சரித்திருக்கிறார் மோடி: ராகுல் காந்தி

Siva
வியாழன், 9 மே 2024 (07:51 IST)
முதல்முறையாக பிரதமர் மோடி தனது நண்பர்கள் அம்பானி, அதானி பெயரை உச்சரித்திருக்கிறார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

ஹிண்டன்பர்க் அறிக்கை கடந்தாண்டு வெளியான போது கூட வாயை திறக்காத பிரதமர் மோடி முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அம்பானி, அதானி பெயரை உச்சரித்துள்ளார் என்றும், பிரதமர் மோடி தனது நண்பர்களையே பகைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

தேர்தல் அறிவித்த தேதியில் இருந்து அம்பானி அதானியை பற்றி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார் என்றும் அம்பானி அதானிடம் இருந்து எவ்வளவு தொகை அவர் பெற்றிருக்கிறார் என்றும் பிரதமர் மோடி நேற்று கேள்வி எழுப்பினார்

அவருக்கு பதில் அளித்துள்ள ராகுல் காந்தி ’மோடிஜி அவர்கள் பயந்துவிட்டார், அதானியும் அம்பானியும் உங்களுக்கு டெம்போவில் பணம் நிரப்பி தருகிறார்களா? இது உங்களின் சொந்த அனுபவமா? பாஜகவின் ஊழல் டெம்போவின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் யார் என்பது நாட்டுக்கே தெரியும், ஒன்று செய்யுங்கள், அவர்களுக்கு சிபிஐ அமலாக்க துறையை அனுப்பி விசாரணை மேற்கொள்ள வையுங்கள், அச்சப்பட வேண்டாம்’ என்று சவால் விடுத்துள்ளார் இந்த சவால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவின் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விலை அதிகரிப்பா? அன்புமணி கண்டனம்..!

ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு.. ஈஷா தரப்பு வாதம்..!

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments