Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் மீதே சர்ஜிக்கல் ஸ்டிரைக்: வெட்கக்கேடு மோடி ஜி

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (15:16 IST)
ரபேல் ஊழல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ரபேல் மோசடியில் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதை பிரான்ஸ் முன்னாள் அதிபர் அம்பலப்படுத்தி விட்டார். 
 
மேலும் ரபேல் விமான பேரத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனில் அம்பானிக்கு தருமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டதால்தான் அந்த ஒப்பந்தம் ரிலையன்ஸுக்குப் போனதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
ஏற்கனவே, ரபேல் விவகாரத்தில் ராகுல் மோடியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் இதற்கு வலு சேர்க்கும் விதமாக சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.  
 
ராகுல் இது குறித்து கூறியது பின்வருமாறு, ரபேல் டீலை ரகசிய அறையில் அமர்ந்து பிரதமரே நேரடியாக தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி, மாற்றியுள்ளார். இப்போது தெரிகிறது அனில் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் எப்படி கைமாறியது என்று. 
 
இந்தியாவுக்குத் துரோகம் செய்து விட்டார் பிரதமர் மோடி. பிரதமரும், அனில் அம்பானியும் சேர்ந்து நாட்டின் பாதுகாப்புப் படை மீது ரூ.1.30 லட்சம் கோடியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியுள்ளனர். 
 
நமது படை வீரர்கள் செய்த தியாகத்தையும், சிந்திய ரத்தத்தையும் அவமானப்படுத்தி விட்டீர்கள் மோடி ஜி. வெட்கக்கேடு. இந்தியாவின் ஆன்மாவுக்கு துரோகம் செய்து விட்டீர்கள் என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments