Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலநடுக்கத்திற்கு ராகுல் காந்திதான் காரணம்: பாஜக எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்து

நிலநடுக்கத்திற்கு ராகுல் காந்திதான் காரணம்: பாஜக எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்து
, செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (12:24 IST)
மாட்டு இறைச்சி சாப்பிட்டு விட்டு ராகுல் காந்தி கேதார்நாத் கோவிலுக்குச் சென்றதால்தான் பூகம்பம் ஏற்பட்டது எள்று பாஜக எம்.பி. சாக்‌ஷி மகராஜ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
 
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்‌ஷி மகராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் அடிக்கடி மதம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிவருவது வழக்கம்.

இந்நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
 
அவர் ஹரித்துவாரில் நேபாள பூகம்பம் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராகுல் காந்தி மாட்டு இறைச்சி சாப்பிட்டு விட்டு புனிதமான கேதார்நாத் கோவிலுக்கு சென்றார். இதனால்தான் நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டது" என்றார்.
 
மேலும், "இந்துக்களின் ஜனத்தொகையை பெருக்க ஒவ்வொரு இந்து பெண்ணும் 4 குழந்தைகள் பெறவேண்டும் என்றும் சாக்‌ஷி மகராஜ் கூறினார். அவரது இந்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil