Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒத்திவைக்கப்பட்டது பஞ்சாப் தேர்தல்! – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (14:36 IST)
பஞ்சாப் தேர்தலை தள்ளி வைக்கும்படி அனைத்து கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரியில் சட்டமன்ற தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பஞ்சாபில் பிப்ரவரி 14 தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிப்ரவரி 16ம் தேதி ரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்காக பல்வேறு பஞ்சாப் மக்களும் உத்தர பிரதேசம் செல்வது வழக்கம்.

இதனால் தேர்தலில் வாக்களிப்பது பாதிக்கப்படும் என பஞ்சாப் அனைத்து கட்சிகளும் தேர்தல் தேதியை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்தன. அதை தொடர்ந்து தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு ஃபோன் ஒரே சார்ஜர்! அடுத்த ஆண்டு முதல்..! – இந்திய அரசு எடுக்கப்போகும் முடிவு?

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments