Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவை சூழும் போர் மேகம்: பள்ளிகளை மூட அரசு உத்தரவு!

இந்தியாவை சூழும் போர் மேகம்: பள்ளிகளை மூட அரசு உத்தரவு!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (16:08 IST)
காஷ்மீர் மாநிலத்தில் உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்று இரவு பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.


 
 
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தான் மக்களை பாதுகாக்க இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயங்காது என எச்சரிக்கை விடுத்தார். இதனால் இரு நாட்டு எல்லை பகுதியிலும் போர் சூழல் உருவாகியுள்ளது.
 
நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது மத்திய அரசு. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
 
எல்லையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments