Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளின் உள்ளாடை குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பள்ளி நிர்வாகம்: பெற்றோர்கள் கொதிப்பு

Webdunia
வியாழன், 5 ஜூலை 2018 (07:28 IST)
புனேவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் குறிப்பிட்ட நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என்று நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு நிபந்தனையை விதித்துள்ளதால் மாணவிகளின் பெற்றோர்கள் கொதித்தெழுந்துள்ளனர்,
 
புனேவில் உள்ள ஒரு பள்ளியின் நிர்வாகிகள் சமீபத்தில் ஒரு நிபந்தனையை மாணவிகளுக்கு விதித்துள்ளனர். அதன்படி மாணவிகள் இனிமேல் வெள்ளை நிறம் அல்லது அவர்களுடைய ஸ்கின் நிறத்தில் மட்டுமே உள்ளாடை அணிய வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை மாணவிகள் அனைவரின் டயரியில் எழுதி, பெற்றோர்கள் அதில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாணவிகள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றும் தண்ணீர் அருந்தவும் குறிப்பிட்ட நேரத்தில் தான் செல்ல வேண்டும் என்றும் நேரம் குறிப்பிட்டு ஒரு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. 
 
இதனால் பெற்றோர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் மாணவிகளின் பாதுகாப்பு கருதியே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து புனே கல்வி இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்