Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி கோவிலில் இருந்து சிலை அகற்றம்! – புனேவில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (08:24 IST)
புனேவில் சமீபத்தில் ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டியிருந்த நிலையில் அதிலிருந்த சிலை அகற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புனேவின் அவுந்த் பகுதியில் பாஜக தொண்டரான மயூர் முண்டே என்பவர் பிரதமர் மோடிக்காக ஒன்றரை லட்சம் செலவில் கோவில் ஒன்றை சமீபத்தில் கட்டினார். அதில் மார்பளவு உயரத்தில் மோடி சிலை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் திடீரென அந்த கோவிலில் இருந்து பிரதமர் மோடி சிலை அகற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவிலை நிர்மாணித்த மயூர் முண்டேதான் சிலையை அகற்றியதாக கூறப்படுகிறது. எனினும் அவர் ஏன் அகற்றினார் என்பது குறித்த தகவல்கள் தெரிய வரவில்லை. இந்நிலையில் சிலை அகற்றப்பட்ட கோவில் முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments