Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. திடீர் சந்திப்பு

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2015 (04:56 IST)
புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமார், தமிழக முதல்வர்  ஜெயலலிதாவை திடீரென சந்தித்தார்.
 
புதுச்சேரி சட்டப் பேரவையில் 30 உறுப்பினர்கள் உள்ளனர்.இதில், 15 எம்.எல்.ஏக்கள் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. மேலும், காரைக்கால் நிரவி தொகுதி சுயேச்சை எம்எல்ஏ சிவக்குமார் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்தார். இதனால், அவருக்கு, புதுச்சேரி அரசு சாராய வடிப்பாலை தலைவர் பதவியை வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில், புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமார், தமிழக முதல்வர்  ஜெயலலிதாவை திடீரென சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான புருஷோத்தமன் உடனிருந்தார்.
 
கடந்த 2011ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் அதிமுக உதவியோடு, என்.ஆர். காங்கிரஸ் கட்சி புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில், புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. சிவக்குமார் தமிழக முதல்வரை சந்தித்திருப்பது, புதுவை அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments