Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு: விருப்பமுள்ளவர்கள் வரலாம்!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (13:49 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் பள்ளி திறக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனேகமாக முழு ஆண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுவை மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அவர்கள் கூறியபோது ’புதுவையில் உள்ள பள்ளிகள் ஜனவரி 4ஆம் தேதி முதல் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படும் என்றும் விருப்பமுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிக்கு வந்து தங்களுடைய சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாகவும், ஜனவரி 18 முதல் பள்ளிகள் முழுவதுமாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
புதுவையில் பள்ளிகள் திறந்தாலும் தமிழகத்தில் பள்ளிகள் இந்த கல்வி ஆண்டில் திறக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments