Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்... 40 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (10:25 IST)
திருப்பதியில்  நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கோவிலில் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


இரண்டாவது சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினம் என்று தொடர் விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. திருப்பதியில் உள்ள அறைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி இருப்பதாகவும் இலவச தரிசனத்திற்கு சுமார் 3 கிலோமீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலவச தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதாகவும்  300 ரூபாய் தரிசன கட்டணத்திற்கு 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருவதாகவும் அது மட்டுமின்றி அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருப்பதால் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து 2-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது என  தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பக்தர்கள் கூட்டம் கோவிலில் இருந்து வெளிவட்டச்சாலை வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் 40 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கோவிலில் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருமலையில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம் இன்று மாலை வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்த 2 நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களுக்கு 2 மடங்கு அதிகமான பிரசாதம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments