Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈ அடிக்கும் தடுப்பூசி முகாமுக்கு ஏகப்பட்ட பில்டப்..??

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (09:44 IST)
நாடு முழுவதும் 2.24 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல். 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால தடுப்பூசியாக கோவாக்சின் மற்றும் கோவுஷீல்டை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகள் ஆரம்ப கட்டமாக முன்கள பணியாளர்கள்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
 
கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் பல முன்கள் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாததாக தெரிய வந்துள்ளது. ஆனால், மத்திய சுகாதார அமைச்சகமோ, கடந்த 2 நாட்களில் நாடு முழுவதும் 2.24 லட்சத்துக்கு அதிகமானோருக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. 
 
அதிலும் குறிப்பாக முதல் நாளில் மட்டும் 2,07,229 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் எனவும் இந்த 2 நாட்களில் வெறும் 447 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்ட பின் பக்க விளைவுகள் ஏற்பட்டன எனவும் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments