பாகிஸ்தான் படை தாக்குதல்; எல்லோயோர கிராம மக்கள் உயிரிழப்பு

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (18:34 IST)
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராம மக்கள் உயிரிழந்ததை அடுத்து பொதுமக்களை பாதுகாக்க அரசு தவறியதாக குற்றம்சாட்டி ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ரணுவமும் பதிலுக்கு பாகிஸ்தான் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சண்டையில் எல்லையோர கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலியாவது நடைபெற்று வருகிறது. 
 
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தோடு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 
 
இந்த விவகாரம் குறித்து இன்று ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. எல்லையில் பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலில் இருந்து அரசு மக்களை பாதுகாக்க தவறியதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments