Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியின் நோட்டில் ஆபாசமாக எழுதிய ஆசிரியர்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2015 (18:17 IST)
12 வயது மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதிய 50 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
 
பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டம் கர்டர்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தல்ஜித் சிங். இவர் தன் வகுப்பில் படிக்கும் 12 வயது மாணவியின் நோட்டுப் புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதியுள்ளார். 
 
இதை கண்டறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதற்குள் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உள்ளூர் மக்கள் பள்ளியில் புகுந்து அந்த ஆசிரியரை அடித்து உதைத்தனர். காவல் துறையினர் வந்து கைது செய்யும் வரை அவரை வகுப்பறையிலேயே பூட்டி வைத்தனர்.
 
அப்போது, இதற்கு முன்பும் பள்ளி ஆசிரியர் தல்ஜித் சிங்  ஒரு மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் பாலியல் உணர்வைத் தூண்டும் வண்ணம் எழுதி அதற்காக மன்னிப்பு கேட்டிருப்பதும் தெரிய வந்தது. இதனால், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!