Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-49: சிவன் பெருமிதம்

Webdunia
சனி, 7 நவம்பர் 2020 (15:48 IST)
பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் விண்ணில் இன்று 3.02க்கு செலுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் திடீரென வானிலை காரணமாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதில் தாமதம் என தகவல் வெளிவந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 49 ராக்கெட் 10 நிமிடங்கள் தாமதமாக 3.12க்கு சரியாக ஏவப்பட்டது. 
 
இந்த நிலையில் 10 செயற்கை கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது என அதிகாரபூர்வமாக சற்றுமுன் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதாக இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
 
கொரோனா காலத்திற்கு பிறகு செயல்படுத்திய திட்டம் வெற்றியை தந்துள்ளது என்றும், பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும்,  இஓஎஸ்-01 நிலைநிறுத்தப்பட்ட நிலையில் மற்ற செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன என்றும் சிவன் தெரிவித்தார்.
 
பிஎஸ்எல்வி சி-49 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டதற்கு  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments