Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎஸ்எல்வி சி-39 தோல்வி!!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (19:37 IST)
இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் ஏவபட்ட சிறிது நேரத்திலேயே திரும்பியதால் இந்த சோதனை தோல்வியில் முடிந்துள்ளது.


 
 
இஸ்ரோ சார்பில் இந்தியாவில் தயாரிப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-39 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 
 
இந்த செயற்கைக்கோள் இயற்கை சீற்றம், பெரிடர் மேலாண்மை, கடல்சார் ஆகிய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 320டன் எடையும், 44.4மீ உயரமும் கொண்டது இந்த செயற்கைக்கோள். 
 
பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்த திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், அதை சரிவர செய்யமுடிவில்லை என்பதால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.
 
ராக்கெட் தோல்விக்கான காரணம் விரைவில் ஆராய்ந்து கூறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட முதல் தனியார் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments