விபச்சார தொழிலுக்கு சட்டரீதியான அங்கீகாரம் கெகாடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் இதை தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தை தடுக்கவும், அதில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கவும் விரிவான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.