Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதுகாப்பு படையினரை விட்டு வேகமாக சென்ற பிரியங்கா

பாதுகாப்பு படையினரை விட்டு வேகமாக சென்ற பிரியங்கா
, வெள்ளி, 2 மே 2014 (18:21 IST)
காங்கிரஸ் துணைத்தலைவரும்  பிரியங்கா காந்தியின் சகோதரருமான ராகுல் காந்தியை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் பிரியங்கா காந்தி மக்களை சந்திக்க அவரது பாதுகாப்பு படையினரை விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
 
இவருக்கு ஆதரவாக இவரின் சகோதரி பிரியங்கா காந்தி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
 
இந்நிலையில், டிலோய் என்ற கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற பிரியங்கா பாதுகாப்பு படையினரோடு செல்லாமல், மக்களை நோக்கி வேகமாக ஓட துவங்கியதாக தெரிகிறது.
 
இதனைக் கண்ட சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள் வேகமாக பிரியங்காவை தொடர்ந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
 

Share this Story:

Follow Webdunia tamil