Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப.சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார்! பிரியங்கா காந்தி டுவீட்

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (08:55 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ப.சிதம்பரம் தற்போது எங்கே இருக்கின்றார் என்று தெரியாத நிலையில் இன்று அவருடைய முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டால் ப.சிதம்பரம் கைதை தவிர்க்க முடியாது என்பது குறிப்ப்பிடத்தக்கது
 
ப.சிதம்பரம் அவர்களை கைது செய்ய எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட பல காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சற்றுமுன் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 
 
மத்திய அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் தான் சிதம்பரம் வேட்டையாடபடுவதாகவும், எந்த சூழலிலும் காங்கிரஸ் அவருக்கு துணை நிற்கும் என்றும் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மிகச்சிறந்த பொருளாதார மேதையும் நிதியமைச்சராகவும் இருந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட ஒருவரை வேட்டையாடுவது வருத்தத்திற்கு உரியது என்றும், உண்மை எப்போதும் வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட்டுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments