Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுலை சமாதானப்படுத்த காங்கிரஸ் அனுப்பிய நபர் – கடைசி முயற்சி !

Webdunia
புதன், 29 மே 2019 (08:54 IST)
காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளதை அடுத்து அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார் அவரது சகோதரி பிரியங்கா காந்தி.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் காங்கிரஸ் வெறும் 52 தொகுதிகளை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸின் காரிய கமிட்டி கூடிய போது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார்.  

இதை சற்றும் எதிர்பாராத காரிய கமிட்டியினர் ராகுல் ராஜினாமா செய்யக்கூடாது என்றும், தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு அவரது ராஜினாமாவை நிராகரித்தனர். அதோடு ராகுலை சந்தித்து சமாதானம் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.

ஆனால் யார் சொன்னாலும் கேட்காத ராகுல் ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கிறார். மேலும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங்கை காங்கிரஸ் தலைவராக நியமிக்கும் படியும் பரிந்துரை செய்துள்ளார். இதனால் ராகுலை சமாதானம் செய்ய அவரது சகோதரி பிரியங்கா மூலம் தூதுவிட்டுள்ளது காங்கிரஸ். இப்போது பிரியங்கா காந்தி ராகுலை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments