Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”100 முறை சொன்னாலும் அது உண்மையாகி விடாது”.. பாஜக மீது பாயந்த பிரியங்கா

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (15:11 IST)
பொருளாதார வளர்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார் பிரியங்கா காந்தி.

மத்திய அரசின் 8 முக்கிய துறைகளில் வளர்ச்சி சதவீதம் 2.1 ஆக சரிந்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் ஒத்துக்கொண்டுள்ள நிலையில் பல அரசியல் தலைவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பாஜக அரசு, நாட்டில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டும், 100 முறை பொய் கூறினாலும் அது ஒரு போதும் உண்மையாகிவிடாது என கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மத்திய அரசு தேச வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமான பணிகளில் எப்போது ஈடுபடும்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 நாட்களுக்கு முன்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்ட செய்தி வெளிவந்ததை குறித்து பாஜக அரசு பொருளாதாரத்தை பஞ்சராக்கியுள்ளது என பிரியங்கா காந்தி கருத்து தெரிவுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments