Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் சலுகை ; அடுத்த வாரமே அறிக்கை தாக்கல் ; சசிகலாவிற்கு சிக்கல்?

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (17:38 IST)
பெங்களூர் சிறையில் சசிகலா உட்பட சிலருக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில், அடுத்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா நேற்று பரபரப்பு புகார் அளித்தார். 
 
இதனையடுத்து, இதுபற்றி விசாரணை செய்ய கர்நாடக உள்துறை முன்னாள் ஐஏஸ் அதிகாரி வினய்குமாரை, அந்த மாநில முதலமைச்சர் சித்தராமய்யா நியமித்தார்.
 
இந்நிலையில், இந்த விசாரணை குறித்த முதல் கட்ட அறிக்கையை, அடுத்த வாரமே வினய்குமார் தாக்கல் செய்வார் எனவும் முழு விசாரணை ஒரு மாதத்திற்குள் அவர் தாக்கல் செய்வார் எனவும்  சித்தராமய்யா அறிவித்துள்ளார். 
 
அடுத்த வாரம் இந்த அறிக்கை வெளியாவதால், சசிகலாவிற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments