Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்.8 ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: மீண்டும் லாக்டவுனா?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (17:00 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் சமீபத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார் என்பதும் அவருடைய ஆலோசனையில் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனா அதிகரித்து வருவதால் ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பின் விரைவில் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அல்லது இரவு நேர ஊரடங்கு அல்லது முழு முடக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments