Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரம் ஓதியவாறு தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்: காட்டி கொடுத்த வீடியோ!

Webdunia
வியாழன், 20 மே 2021 (08:37 IST)
மந்திரம் ஓதியவாறு தாலியில் இருந்த தங்கத்தை திருடிய புரோகிதர்: காட்டி கொடுத்த வீடியோ!
திருமணத்தை நடத்தி வைத்த புரோகிதர் ஒருவர் தாலியை கையில் வைத்துக்கொண்டு மந்திரம் ஓதியவாறு தாலியில் உள்ள தங்க குண்டுமணிகள் திருடிய சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்திய புரோகிதர் தாலியை கையில் வைத்துக்கொண்டு மந்திரம் ஓதினார். அப்போது அவர் நைசாக தாலியில் இருந்த தங்க குண்டுமணிகளை திருடியதாக தெரிகிறது 
 
இது குறித்து திருமணத்தில் கலந்து கொண்ட யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திருமண வீடியோவை திருமண வீட்டார் போட்டு பார்க்கும்போது புரோகிதர் தாலியில் உள்ள தங்கத்தை திருடியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து காவல் நிலையத்தில் திருமண வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் புரோகிதரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரு புரோகிதரே தாலியில் உள்ள தங்கத்தை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

முதல்வர் ஸ்டாலினுக்கு 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தம்.. எப்போது டிஸ்சார்ஜ்?

இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: சிறப்பு ரயில்களின் முழு விவரங்கள்..!

பீகாரில் 35 லட்சம் வாக்காளர்களை காணவில்லை.. தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்