Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு.! வேலையில்லா திண்டாட்டம்..! பிரியங்கா காந்தி விமர்சனம்..!!

Senthil Velan
புதன், 24 ஏப்ரல் 2024 (16:42 IST)
உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்பவே பாஜக தலைவர்கள் பேசி வருகிறார்கள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
 
கேரளா மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிவேகமாக உயர்ந்துள்ளது என்றார்.

அதேபோன்று வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளது என்றும் ஆனால், பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை என்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினர்.
 
பாஜகவினர் வளர்ச்சியைப் பற்றி பேச மாட்டார்கள். என்றும் மாறாக, பாஜக தலைவர்கள் மக்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பிரச்சினைகளை கொண்டு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 

ALSO READ: எதையும் செய்ய மாட்டார்..!. அதுதான் மோடியின் கேரன்டி.! மல்லிகார்ஜுன கார்கே...!!

அதாவது, உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே அவர்கள் பேசி வருகிறார்கள் என்று பிரியங்கா காந்தி விமர்சித்தார். இந்த மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments