Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல்: அதிகாரபூர்வமாக சட்டமாகியதால் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (19:38 IST)
சமீபத்தில் மத்திய அரசு வேளாண் மசோதாக்கள் மூன்றை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது என்பதும் எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதாக்களை இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரிடம் கோரிக்கை வைத்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் 
 
குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இந்த மூன்று மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலால் 3 மசோதாக்கள் அதிகாரபூர்வமாக சட்டமாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் எதிர் கட்சி எம்பிக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments