Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. உடனே நடைமுறைக்கு வருகிறதா?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:31 IST)
சமீபத்தில் பாராளுமன்றத்தில் மூன்று புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த சட்டங்கள் உடனே நடைமுறைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் 150-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்தபோது மூன்று புதிய குற்றவியல் தடுப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 1898 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய நியாய சன்ஹிதா என்றும் 1860 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய சுரக்ஷா சன்ஹிதா என்றும் 1872 ஆம் ஆண்டு சட்டத்திற்கு  பாரதிய சாக்‌ஷிய அதினியம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments