3 புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. உடனே நடைமுறைக்கு வருகிறதா?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:31 IST)
சமீபத்தில் பாராளுமன்றத்தில் மூன்று புதிய குற்றவியல் தடுப்பு சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து இந்த சட்டங்கள் உடனே நடைமுறைக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் 150-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருந்தபோது மூன்று புதிய குற்றவியல் தடுப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 1898 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய நியாய சன்ஹிதா என்றும் 1860 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பாரதிய சுரக்ஷா சன்ஹிதா என்றும் 1872 ஆம் ஆண்டு சட்டத்திற்கு  பாரதிய சாக்‌ஷிய அதினியம் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments