Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’அனுஷ்கா சர்மாவை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பு அற்றவர்கள்’ - பிரீத்தி ஜிந்தா கொதிப்பு

’அனுஷ்கா சர்மாவை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பு அற்றவர்கள்’ - பிரீத்தி ஜிந்தா கொதிப்பு
, செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (18:15 IST)
அனுஷ்கா சர்மாவை விமர்சிப்பவர்கள் முதுகெலும்பு அற்றவர்கள் என்று பாவிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா கூறியுள்ளார்.
 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியைக் கான அவருடைய காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா வந்திருந்தார்.
 

 
இதனால் அனுஷ்கா சர்மா வந்திருந்ததால்தான் விராட் கோலி விரைவில் ஆட்டமிழந்தார் என்று ரசிகர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இது குறித்து கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் ஆட்டம் முடிந்ததும் இருவரும் வழக்கம்போல விமான நிலையத்திற்கு ஜோடியாகவே வந்தனர்.
 
விமர்சனங்கள் பலவாறு எழுந்தாலு ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் விராட் கோலி ஆட்டமிழந்ததற்கு அனுஷ்கா சர்மாவை விமர்சிக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், இதற்கு பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா அனுஷ்கா சர்மாவிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து பிரீத்தி ஜிந்தா கூறுகையில், ''முதுகெலும்பு அற்றவர்களால்தான் இது போன்று சிணுங்களாக பேச முடியும். அவர்களுடைய பேச்சுக்களுக்கு நாம் கவனம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். அடுத்த முறை விராட் கோலி ’ஆட்ட நாயகன்’ விருது பெறும் போது, அந்த விருதை அனுஷ்கா சென்று வாங்க வேண்டும்” என்றார்.
 
மேலும் அவர், ”அனுஷ்கா சர்மா தனது காதலருக்கு ஆதரவு தெரிவிக்க சென்றதை, பொதுமக்கள் ஏளனத்திற்கு உள்ளாக்கியது எப்படி என்பது எனக்கு விசித்திரமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் பிரபலங்களை விமர்சிப்பதும், கேலிக்கு உள்ளாக்குவதும் மிகவும் அநியாயமானது” என்றும் பிரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil