Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார் - மைதானத்தில் மூன்று இடங்களில் அத்துமீறியதாக வாக்குமூலம்

பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார் - மைதானத்தில் மூன்று இடங்களில் அத்துமீறியதாக வாக்குமூலம்
, புதன், 25 ஜூன் 2014 (11:42 IST)
பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அவரது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக மும்பை வாங்கடே மைதானத்தில் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
ஐபிஎல் பஞ்சாப் அணி உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா மற்றொரு உரிமையாளரும், தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் அளித்தார்.

கடந்த மே மாதம் 30 ஆம் தேதி  வாங்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற்றப் போது, மைதானத்தில் 3 இடங்களில் வாடியா தன்னிடம் அத்துமீறி நடந்ததாகவும், தகாத விதத்தில் பேசியதாகவும் பிரீத்தி ஜிந்தா புகார் அளித்திருந்தார்.
webdunia
இதை அடுத்து, மும்பை வாங்கடே மைதானத்தில் அவரது வாக்குமூலத்தை காவல் துறையினர் பதிவு செய்தனர். அதில் பிரீத்தி சாட்சியங்களாக 14 பேரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாகவும் அவர்களில் நெஸ் வாடியாவின் நண்பர்கள், பஞ்சாப் அணியை சேர்ந்தவர்கள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஆகியோர் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

Share this Story:

Follow Webdunia tamil