Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசவத்திற்கு படுக்கை வசதி இல்லை: 13 நேரம் அலைந்த கர்ப்பிணி குழந்தையுடன் உயிரிழப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (10:18 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகள் ஆக்கிரமித்து கொண்டதால் பிரவசத்திற்கு வரும் கர்ப்பிணிகள் உள்பட மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது 
 
அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் பெரும்பாலும் கொரோனா நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இருந்தாலும் கொரோனா நோயாளிகளிடம் அதிக பணம் பெறலாம் என்பதால் மற்ற நோயாளிகளுக்கு படுக்கை இல்லை என்று கூறப்படும் நிலை தான் உள்ளது.
 
இந்த நிலையில் நொய்டாவில் உள்ள ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சித்த போது எந்த மருத்துவமனைகளிலும் படுக்கை வசதி இல்லாததால் கிட்டத்தட்ட 13 மணி நேரமாக அலைந்துள்ளார். இதனை அடுத்து அவர் குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்ததாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கியது போக மற்ற நோயாளிகளுக்கும் படுக்கை வசதிகளை மருத்துவமனைகளில் இடம் ஒதுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படுக்கைகள் இருக்கும்போதே இல்லை என கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments