ராமர் கோவில் திறக்கும் நாளில் குழந்தை பிறக்க வேண்டும்! சர்ஜரிக்காக குவியும் விண்ணப்பங்கள்..!

Mahendran
திங்கள், 8 ஜனவரி 2024 (11:18 IST)
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதை அடுத்து அதே நாளில் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என ஏராளமான கர்ப்பிணி பெண்கள்  மருத்துவமனைகளில் விண்ணப்பம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ராமர் கோவில் திறப்பு தினத்தில் பிரசவமாக வேண்டும் என அறுவை சிகிச்சைக்காக உத்தரப்பிரதேச மருத்துவமனையில் விண்ணப்பங்கள் குவிய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
 
 ஜனவரி இரண்டாவது வாரத்துக்கு பின் பிரசவ தேதியில் உள்ள 35 பெண்கள் ராமர் கோவில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 
ராமர் கோவில் திறப்பு நாளில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருவதால்  திட்டமிட்டதை விட அன்றைய தினத்தில் அதிக பிரசவங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இந்த முடிவை எடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

செங்கோட்டையன் சொன்னது உண்மையா?!.. நிர்மலா சீதாராமன் விளக்கம்!..

வெறும் பென்சிலை வைத்து சுவரில் ஓட்டை போட்ட நபர்.. சுவர் அவ்வளவு பலவீனமா?

குண்டு வெடிப்புக்கு பின் 3 முறை போன் செய்தேன்.. பதிலில்லை: 26 வயது மகனை இழந்த தந்தை உருக்கம்.!

குழந்தை பெற்று டிஸ்சார்ஜ் ஆன பெண் உயிரிழப்பு.. சிறப்பு விசாரணைக்கு அமைச்சர் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments