Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை செய்யாவிட்டால் பாஜக எளிதில் வெற்றி பெற்றுவிடும்: மக்களவை தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர்..!

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (16:43 IST)
வரும் மக்களவை தேர்தலில்  காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் குறைந்தபட்சம் 30 சதவீதம் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும் இல்லை எனில் வரும் தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெற்று விடும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் 
 
2024 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் பலருக்கு எழும்பியுள்ளது. 
 
இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் மக்களவைத் தேர்தல் குறித்து கூறிய போது ’கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் பாஜக பலவீனமாக உள்ளது. ஆனால் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப ஹிந்தி பேசும் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிரா போன்ற வலுவான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தேவை. 
 
பாஜகவுடன் நேரடியாக மோத உள்ள தொகுதிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும். இல்லை எனில் வரும் தேர்தலில் பாஜக எளிதில் வெற்றி பெற்று விடும் என்று  கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்காக 30 சதவீதம் தொகுதிகளை விட்டுக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments