Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் இணைகின்றாரா பிரசாந்த் கிஷோர்?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (07:07 IST)
தேர்தல் வியூகத்தில் மன்னன் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோர்களுக்கு சமீபத்தில் வெற்றியைத் தேடித்தந்தவர் பிரசாந்த் கிஷோர். மூவரையும் முதல்வராகிய பிரசாந்த் கிஷோர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியை முதல்வராக்க தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து நீண்ட நேரம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை செய்து உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் காங்கிரஸில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பது குறித்து 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
 
மேலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியை மேலும் வலுப்படுத்தும் திட்டம் பிரசாந்த் கிஷோருக்கு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments