Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் இணைகின்றாரா பிரசாந்த் கிஷோர்?

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (07:07 IST)
தேர்தல் வியூகத்தில் மன்னன் என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
தமிழகத்தில் முக ஸ்டாலின், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆகியோர்களுக்கு சமீபத்தில் வெற்றியைத் தேடித்தந்தவர் பிரசாந்த் கிஷோர். மூவரையும் முதல்வராகிய பிரசாந்த் கிஷோர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியை முதல்வராக்க தீவிரமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் நேற்று டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் சந்தித்து நீண்ட நேரம் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை செய்து உள்ளதாகவும் இதனை அடுத்து அவர் காங்கிரஸில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பது குறித்து 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது
 
மேலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியை மேலும் வலுப்படுத்தும் திட்டம் பிரசாந்த் கிஷோருக்கு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments