Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தகவல்..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (15:19 IST)
நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை பிரக்யான் ரோவர்  ஆய்வு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம், நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் சந்திராயனிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கியது என்பதும் அதன் பின்னர் அதிலிருந்து பிரக்யான் ரோவர்  தரை இறங்கி தற்போது நிலவை சுற்றி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தின் வெப்பநிலையை பிரக்யான் ரோவர் ஆய்வு செய்து அது குறித்த தகவல்களை  அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.  
 
நிலவின் தென் துருவத்தில் பல்வேறு  ஆழத்தில் நிலவும் வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாகவும் பிரக்யான் ரோவரில் உள்ள சாஸ்ட் என்னும் கருவி, நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
இந்த ஆய்வுக்கு பின்னர் தான் மனிதர்கள் வாழ தகுதியான வெப்பநிலை நிலவில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments