Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவின் மேற்பரப்பு வெப்பநிலையை ஆய்வு செய்தது பிரக்யான் ரோவர்: இஸ்ரோ தகவல்..!

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (15:19 IST)
நிலவின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலையை பிரக்யான் ரோவர்  ஆய்வு செய்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 விண்கலம், நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் சந்திராயனிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தரையிறங்கியது என்பதும் அதன் பின்னர் அதிலிருந்து பிரக்யான் ரோவர்  தரை இறங்கி தற்போது நிலவை சுற்றி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நிலவின் தென்துருவத்தின் வெப்பநிலையை பிரக்யான் ரோவர் ஆய்வு செய்து அது குறித்த தகவல்களை  அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.  
 
நிலவின் தென் துருவத்தில் பல்வேறு  ஆழத்தில் நிலவும் வெப்பநிலையை பதிவு செய்துள்ளதாகவும் பிரக்யான் ரோவரில் உள்ள சாஸ்ட் என்னும் கருவி, நிலவின் வெப்பநிலையை ஆய்வு செய்து வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
இந்த ஆய்வுக்கு பின்னர் தான் மனிதர்கள் வாழ தகுதியான வெப்பநிலை நிலவில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments