Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல் துறையினருக்கு இனி வாரம் ஒருநாள் விடுமுறை

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (22:37 IST)
புதுச்சேரியில் பீட் (ரோந்து) காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கப்பட உள்ளது என துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார்.
 

 
புதுச்சேரியில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் ரோந்து காவல்துறையினருக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கிரண்பேடி, ”தற்போது காவல் பணிகள் முற்றிலும் மாறிவிட்டது. பொதுமக்களை காவல்துறையினர் கண்காணிக் கின்றனர். பொது மக்களும் காவல்துறையினரை கண்காணிக்கின்றனர். பொது மக்களுக்கு விரைவான தீர்வு தேவைப்படுகிறது.
 
பீட் காவல்துறையின் பணிகள் குறித்தும் அவர் களுக்கு என்ன தேவை என்றும் அவர்களிடம் கருத்துகேட்டேன். அதற்கு பதிலளித்த சிலர் காவல்துறையினருக்கு வார விடுமுறை வேண்டும் என்றனர். அவர்களுக்கு வார விடுமுறை வழங்க நான் ஆதரவு தருகிறேன். இதுபற்றி டிஜிபி தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
 
ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் மேடையில் இருந்த காவல் துறை டி.ஜி.பி. சுனில்குமார், பீட் காவல்துறையினருக்கு உடனடியாக வார விடுமுறை வழங்குவதாக அறிவித்தார்.
 
இதுபற்றி கூறிய அவர், 'முதலில் பீட் காவல்துறையினருக்கு மட்டும் வார விடுமுறை வழங்கப்படும். மற்ற காவல்துறையினருக்கும் வார விடுமுறை வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும்' என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments