Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு: குஜராத் தேர்தலில் குளறுபடி!!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (16:29 IST)
குஜராத்தில் இன்று முதல்கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்து வரும் 14 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  
 
இரண்டு கட்ட வாக்குபதிவு முடிந்தவுடன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் 57 பெண்கள் உட்பட 977 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 24,689 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில், சூரத், ராஜ்கோட் மற்றும் கொசம்பா பகுதிகளில் வாக்கு பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதே போல் மேலும் சில இடங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரமும் பழுதடைந்தாக கூறப்படுகிறது. 
 
இதனால், பழுதடைந்த வாக்குப் பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வேறு இயந்திரங்கள் விரைவாக மாற்றப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 2 மணி வரை மொத்தம் 35.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments