Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி திடீர் கைது - டெல்லியில் பரபரப்பு

ராகுல் காந்தி திடீர் கைது - டெல்லியில் பரபரப்பு

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (15:40 IST)
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஒரே பதவி மற்றும் ஒரே ஓய்வூதியத்தை வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் தொடர்ந்து டெல்லியில் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், இந்த போராட்டத்தில் பங்கேற்ற அரியானாவைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரோவால் என்பவர், இன்று  தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தைக் காண பல்வேறு அரசியல் தலைவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். 
 
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராம் கிஷன் உடலைக் காணவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவும், ராம் கிஷன் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வந்தார். ஆனால், அவரை உள்ளே விட மறுத்த போலீசார், அவரை கைது செய்தனர். கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை  நடவடிக்கை காரணமாக இந்த கைது நடைபெற்றது என்று போலீசார் கூறியுள்ளனர்.
 
ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட தகவல் வெளியானவுடன், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாரக்ள்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments