Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலரை கொன்ற பயங்கரவாதிகள் 3 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Webdunia
ஞாயிறு, 22 ஜூலை 2018 (10:27 IST)
ஜம்மு காஷ்மீரில் போலீஸ்காரரை கொன்ற பயங்கரவாதிகளில் 3 பேரை எல்லை பாதுகாப்புப் படையினர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
ஜம்முகாஷ்மீரில் முகம்மது சலீம் என்பவர் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவரின் அதிரடி நடவடிக்கைகளால் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சலீம் விடுமுறைக்காக குல்காமில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரை பயங்கரவாதிகள் சிலர் கடத்தி படுகொலை செய்தனர். இதனால் சலீம் குடும்பத்தினரும் காவல் துறையினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்த ராணுவத்தினர் அவர்களில் 3 பேரை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments