Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை: 2 பேர் பலி

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:39 IST)
சிறையிலிருந்து தப்பித்த குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டர் செய்ததில் 2 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
பீகார் மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ராஜ்னிஷ் மற்றும் மனிஷ் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் 
 
இந்த நிலையில் இந்த இரண்டு குற்றவாளிகள் திடீரென சிறையிலிருந்து தப்பிச் சென்றதையடுத்து போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர்
 
இந்த நிலையில் வாரநாசி பகுதியில் அந்த இரண்டு குற்றவாளிகளும் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களை தேடி போலீசார் சென்றனர் 
 
அப்போது போலீசாரை பார்த்ததும் அந்த இரண்டு பேரும் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து போலீசார் திருப்பி சுட்டதில் தப்பிச்சென்ற குற்றவாளிகள் இரண்டு பேரும் குண்டடிபட்டு உயிரிழந்தனர். இந்த என்கவுண்டர் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments