Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேடப்பட்ட குற்றவாளியை தேடிப்பிடித்து போட்டுத்தள்ளிய போலீஸ்

Webdunia
சனி, 14 ஜூலை 2018 (13:47 IST)
பஞ்சாப்பில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீஸார் தேடிப்பிடித்து என்கவுண்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சன்னி மாசிஹ் என்பவன் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவன். இவன் மீது ஏராளமான வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அவன் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்து வந்தான். போலீஸாரும் தனிப்படை அமைத்து அவனை தீவிரமாக தேடி வந்தனர்.
 
இந்நிலையில் நேற்று சன்னி தனது கூட்டாளிகளோடு காரில் வந்தவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை திருடிச் சென்றுள்ளான். இதனையறிந்த போலீஸார் அவனை துரத்திச் சென்றனர். அப்போது அந்த ரவுடி கும்பல் காரிலிருந்து போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள்.
இதனால் பதிலுக்கு போலீஸாரும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு பேரை கைது செய்த போலீஸார், சன்னியை சுட்டுக் கொன்று பிடித்தனர். இச்சம்பவம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments