Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எவ்ளோ நேரம்யா பணம் எண்ணுவ? டயர்டாகி தூங்கிய திருடன்! – அலேக்காய் தூக்கிய போலீஸ்!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:36 IST)
ஆந்திராவில் வீடு ஒன்றில் திருட சென்ற திருடன் அங்கேயா குறட்டை விட்டு தூங்கி போலீஸில் மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களை நடத்தி வந்த திருடன் சூரிபாபு. இவன்மீது பல்வேறு குற்ற செயல்கள் குறித்த வ்ழக்கு உள்ள நிலையில் கோக்கவரம் கிராமத்தை சேர்ந்த பைனான்சியர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவர் வீட்டில் திருட சென்றுள்ளார்.

ஸ்ரீநிவாஸின் அறைக்குள் புகுந்து கட்டிலுக்கு அடியில் பதுங்கியுள்ளார் சூரிபாபு. ஸ்ரீநிவாஸ் தூங்கியதும் பணத்தை திருட சூரிபாபு திட்டமிட்ட நிலையில் ஸ்ரீநிவாஸ் பணத்தை எண்ணி முடித்துவிட்டு தூங்க நள்ளிரவு நேரம் ஆகியுள்ளது. இதனால் டயர்டான சூரிபாபு கட்டிலுக்கு கீழேயே தூங்கியுள்ளார்.

அவரின் குறட்டை சத்தம் கேட்டு கீழே பார்த்த ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளிக்க அங்கு விரைந்த போலீஸ் தூங்கி கொண்டிருந்த சூரிபாபுவை எழுப்பி கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

மதுரை மாநாட்டிற்கு அனுமதி கேட்ட தவெக! கேள்விகளை அடுக்கிய காவல்துறை!

அம்பேத்கர் சிலையை உடைத்து கால்வாயில் வீசிய மர்ம நபர்கள்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments