Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்தவர்களில் உன்னை யார் அதிகமாக சந்தோஷப்படுத்தியது: போலீசின் வக்கிரம்!

பலாத்காரம் செய்தவர்களில் உன்னை யார் அதிகமாக சந்தோஷப்படுத்தியது: போலீசின் வக்கிரம்!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (09:14 IST)
கேரளாவில் 33 வயதான பெண் ஒருவர் தனது கணவரின் நண்பர்கள் 4 பேரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்டார். தொடர் மிரட்டல்களால் இந்த கொடூர சம்பவத்தை யாரிடமும் சொல்லாமல் இருந்த அந்த பெண் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார்.


 
 
ஆனாலும் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து மிரட்டல் சென்றிருக்கிறது. போலீசும் தங்கள் பங்கிற்கு அந்த பெண்ணை சித்திரவதை செய்துள்ளனர். உன்னை பலாத்காரம் செய்தவர்களில் யார் உன்னை அதிகமாக சந்தோஷ்ப்படுத்தியது போன்ற வக்கிரமான கேள்விகளை எல்லாம் கேட்டுள்ளனர்.
 
இவற்றை எல்லாம் எதிர் கொள்ள முடியாத அந்த பெண் தனது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து பிரபல மலையாள டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுத அது வைரலாக பரவியுள்ளது.
 
பலராலும் பகிரப்பட்ட இந்த சம்பவம் குறித்தான பதிவு கேரளா முதலமைச்சர் வரைக்கும் சென்றுள்ளது. தற்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments