Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி.. அப்பாயின்மெண்ட் கொடுத்த பிரதமர் அலுவலகம்..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:48 IST)
வரும் 20ஆம்  தேதி பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க இருப்பதாகவும் இதற்கான அப்பாயின்மென்ட்டை பிரதமர் அலுவலகம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் மம்தா பானர்ஜி தனது மாநிலத்திற்கான நிதி நிலுவை தொகையை விடுவிப்பது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் டிசம்பர் 20ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க அவருக்கு பிரதமர் அலுவலகம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்து தனது மாநிலத்திற்கு தேவையான நிதி நிலை தொகையை விடுவிக்க அவர் கோரிக்கை விட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டிசம்பர் 20ஆம் தேதி காலை 11 மணி அளவில் மோடி - மம்தா சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் மேற்கு வங்காளத்திற்கு 1.15 லட்சம் கோடி மத்திய அரசு பாக்கி வைத்துள்ள நிலையில்  அந்த தொகையை விடுவிக்க அவர் கோரிக்கை விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments