Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி.. அப்பாயின்மெண்ட் கொடுத்த பிரதமர் அலுவலகம்..!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:48 IST)
வரும் 20ஆம்  தேதி பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்திக்க இருப்பதாகவும் இதற்கான அப்பாயின்மென்ட்டை பிரதமர் அலுவலகம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. இந்த நிலையில் மம்தா பானர்ஜி தனது மாநிலத்திற்கான நிதி நிலுவை தொகையை விடுவிப்பது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் டிசம்பர் 20ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க அவருக்கு பிரதமர் அலுவலகம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடியை சந்தித்து தனது மாநிலத்திற்கு தேவையான நிதி நிலை தொகையை விடுவிக்க அவர் கோரிக்கை விட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டிசம்பர் 20ஆம் தேதி காலை 11 மணி அளவில் மோடி - மம்தா சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் மேற்கு வங்காளத்திற்கு 1.15 லட்சம் கோடி மத்திய அரசு பாக்கி வைத்துள்ள நிலையில்  அந்த தொகையை விடுவிக்க அவர் கோரிக்கை விடுப்பார் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

மம்தா பானர்ஜியின் இன்றைய இங்கிலாந்து பயணம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments