Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் குடும்பம்னு போடாதீங்க.. ஆதரவாளர்களுக்கு பிரதமர் மோடி திடீர் வேண்டுகோள்!

Prasanth Karthick
செவ்வாய், 11 ஜூன் 2024 (20:01 IST)
பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’, ‘மோடி கா பரிவார்’ என குறிப்பிட்டு வந்த நிலையில் அதை நீக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அப்போது பாஜக ஆதரவாளர்கள் பலரும் சமூக வலைதள கணக்குகளில் தங்கள் பெயருக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’ என்ற அடைமொழியை சேர்த்து வைரலாக்கினர். தற்போது பாஜக கூட்டணி வென்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்' சேர்த்தனர். நான் அதிலிருந்து நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இது ஒரு வகையான சாதனையாகும், மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் உங்கள் சமூக ஊடக சொத்துக்களில் இருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒரு பரிவார் என்ற நமது பந்தம் வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஜினியரிங் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. டிரைவரை தேடும் காவல்துறையினர்..!

சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் அதிரடி கைது.. விசாரணையில் திடுக் தகவல் கிடைக்குமா?

நில மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த சென்னை ஐகோர்ட்..!

போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை: ஈரோடு இடைத்தேர்தல் குறித்து தவெக அறிவிப்பு

மகளின் ஆபாச புகைப்படங்கள் விற்பனை செய்த தாய், தந்தை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments