Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துமஸில் நல்லிணக்கம், மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்! – பிரதமர் மோடி வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (09:44 IST)
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் பலர் தங்கள் வீடுகளை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளதுடன், புத்தாடை அணிந்து சர்ச் சென்று வழிபாடு செய்து கிறிஸ்துமஸை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ள பிரதமர் மோடி “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு நாள் நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும். கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத எண்ணங்களையும், சமுதாயத்திற்கு சேவைசெய்வதில் வலியுறுத்தப்பட்டதையும் நினைவு கூர்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவது உள்ள மக்களுக்கு போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments