Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்! – பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 10 ஜூலை 2022 (08:43 IST)
இன்று இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மக்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையான பக்ரீத் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.

தியாக திருநாள் என்று அழைக்கப்படும் இந்த நாள் ”ஈத் அல் அதா” என்றும் அழைக்கப்படுகிறது. இன்று பக்ரீத் பெருநாளில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி “ஈத் முபாரக். ஈத் அல் அதா வாழ்த்துக்கள். மனித குலத்தின் நன்மைக்காக கூட்டு நல்வாழ்வு மற்றும் செழுமைக்கான உணர்வை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த பண்டிகை நம்மை ஊக்குவிக்கட்டும்” என்று கூறியுள்ளார். பக்ரீத் பண்டிகையில் மேலும் பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments