Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா; முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (10:35 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்துவதும் தீவிரப்படுத்தப்பட்டது.

ஆனாலும் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகள் தொடர்ந்து பரவி வருவதால் அடிக்கடி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சமீபமாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

வட மாநிலங்களான உத்தர பிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 27ம் தேதியன்று கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல் அமைச்சர்களோடும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த காணொலி ஆலோசனையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments