Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கொரோனா; முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (10:35 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

உலகம் முழுவதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்துவதும் தீவிரப்படுத்தப்பட்டது.

ஆனாலும் கொரோனாவின் வெவ்வேறு வேரியண்டுகள் தொடர்ந்து பரவி வருவதால் அடிக்கடி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சமீபமாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

வட மாநிலங்களான உத்தர பிரதேசம், மிசோரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் தினசரி பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 27ம் தேதியன்று கொரோனா பரவல் குறித்து அனைத்து மாநில முதல் அமைச்சர்களோடும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த காணொலி ஆலோசனையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments