Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரே மித்ரோ!! மீண்டும் வருகிறார் மோடி: எப்போ தெரியுமா?

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (15:05 IST)
நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், நான்கு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருக்கின்றனர் என்பதுமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் சீன எல்லையில் நடந்த மோதல் குறித்தும் அதன் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய பிரதமர் மோடி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். வரும் 19 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து நாட்டு மக்களிடம் வரும் 21ஆம் தேதி உரையாற்றுகிறார் பிரதமர் மோடி என தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையாடலின் போது சீனாவுடனான பிரச்சனை குறித்தும் கொரோனா குறித்தும் ஊரடங்கு நிலைபாடு குறித்தும் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments