Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோபைடனுடன் பேசிய பிரதமர் மோடி: இருநாட்டு உறவை வலுப்படுத்த ஆலோசனை!

ஜோபைடனுடன் பேசிய பிரதமர் மோடி: இருநாட்டு உறவை வலுப்படுத்த ஆலோசனை!
Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (07:30 IST)
ஜோபைடனுடன் பேசிய பிரதமர் மோடி
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் அவர்களுடன் பாரத பிரதமர் மோடி போனில் பேசி ஆலோசனை செய்துள்ளார்
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடன் அவர்களுடன் பிரதமர் மோடி பேசியதாகவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் இந்திய-அமெரிக்க உறவின் முக்கியத்துவத்தை குறித்து ஜோ பைடன் அவர்களுடன் மோடி உரையாற்றியதாகவும், இரண்டு நாடுகளும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி கொரோனா, காலநிலை மாற்றம், இரண்டு நாடுகளின் ஒற்றுமை குறித்து ஆலோசனை செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவருடைய வெற்றி மிகப் பெரிய பெருமை அளிக்கக்கூடிய விஷயம் என்றும், அமெரிக்க இந்தியர்களுக்கு இந்த வெற்றி உற்சாகம் அளிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
 
இன்னும் ஒரு சில நாட்களில் அதிபராக பதவி ஏற்க இருக்கும் ஜோபைடன் அவர்களுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்ததால் பரபரப்பு..!

கேரள பாஜக தலைவர் அறிவிப்பு.. தமிழக தலைவர் அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்