Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (12:51 IST)
இந்திய பிரதமர் மோடி வானொலியில் ஒவ்வொரு மாதமும் மான்கீபாத் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார் என்பதும் அவற்றுக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்பதும் தெரிந்ததே  
அந்தவகையில் இன்று அவர் மான்கிபாத் நிகழ்ச்சியில் பேச உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார்
 
தற்போது விவசாயிகள் போராட்டம் உச்சகட்டமாக நடந்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு பிரதமர் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். விழிப்புணர்வே அதிகாரம் என்பதை விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்  
 
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கி உள்ளதாகவும் வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய கதவுகளைத் திறந்து உள்ளதாகவும் பிரதமர் மோடி மான்கிபாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்
 
மேலும் கடந்த சில ஆண்டுகளில் பல சிலைகள் கலைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்திய மரபு சின்னங்களும் அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments