Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது: மன்கீபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (12:51 IST)
இந்திய பிரதமர் மோடி வானொலியில் ஒவ்வொரு மாதமும் மான்கீபாத் என்ற நிகழ்ச்சியில் பேசி வருகிறார் என்பதும் அவற்றுக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்பதும் தெரிந்ததே  
அந்தவகையில் இன்று அவர் மான்கிபாத் நிகழ்ச்சியில் பேச உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்த நிலையில் சற்று முன்னர் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார்
 
தற்போது விவசாயிகள் போராட்டம் உச்சகட்டமாக நடந்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு பிரதமர் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். விழிப்புணர்வே அதிகாரம் என்பதை விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்  
 
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கி உள்ளதாகவும் வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய கதவுகளைத் திறந்து உள்ளதாகவும் பிரதமர் மோடி மான்கிபாத் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்
 
மேலும் கடந்த சில ஆண்டுகளில் பல சிலைகள் கலைப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்திய மரபு சின்னங்களும் அடையாளங்களும் கடத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்  

தொடர்புடைய செய்திகள்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments